உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நிலம் தொடர்பான தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு 

 நிலம் தொடர்பான தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு 

வானுார்: நிலம் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கிளியனுார் அடுத்த நல்லாவூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, 65; இருவரது குடும்பத்தினருக்குமிடையே நிலம் குறித்த தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்புக்கு பிறகு, அந்த இடத்தில் குமரவேல், மதில் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால், முனுசாமி குடும்பத்தினர் தகராறு செய்ததால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில், முனுசாமியும், குமரவேலும் காயம் அடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், முனுசாமி, குமரவேல் உட்பட 7 பேர் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ