மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகள் மாநாடு
20-Aug-2025
விழுப்புரம்; தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன் கண்டன உரையாற்றினர். இதில், பாலஸ்தீன மக்களை பாதுகாக்கக்கோரியும், இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது, நிர்வாகிகள் முத்துவேல், மும்மூர்த்தி, அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
20-Aug-2025