உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திரவுபதியம்மன் ஜெயந்தி விழா

திரவுபதியம்மன் ஜெயந்தி விழா

செஞ்சி : மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் திரவுபதியம்மன் ஜெயந்தி விழா நடந்தது. செஞ்சி அடுத்த மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் திரவுபதியம்மன் ஜெயந்தி விழாவையொட்டி, குணசேகரன், ஜெயக்குமார் சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தி, கலசாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலக்காரமும், ம கா தீபாராதனை நடந்தது. சோ.குப்பம் பஜனை கோஷ்டியினரின் பஜனை நடந்தது. முன்னதாக சோழர் வணிகப் படை நிறுவனர் மோகன்சாமி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., தீரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஆத்மலிங்கம், அறவாழி முன்னிலை வகித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை