உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

மரக்காணம் : திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன், 64; இவர், நேற்று காலை 5:30 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி நடைபயிற்சி சென்றார்.அப்போது, மானுார் அருகே ராஜேந்திரன் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி