மேலும் செய்திகள்
வயிற்று வலியால் முதியவர் தற்கொலை
23-Jul-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலி தாளாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விஸ்வரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன், 54; விவசாயி. திருமணமாகாதவர். இவர் தனது சகோதரர்களுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த, 17ம் தேதி காலை வயிற்று வலி தாளாமல் எலி பேஸ்ட் சாப்பிட்டார். தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அன்பழகன் இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Jul-2025