உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கார் மோதி விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 75; விவசாயி. நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு, திண்டிவனம் - செஞ்சி மெயின் ரோடு ஓரமாக நடந்து வந்தார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற டாடா எட்டியாஸ் கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஷனை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ