உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

விழுப்புரம் : விழுப்புரத்தில் மனநலம் பாதித்த மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் எஸ்.பி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் ராஜப்பன் மகள் திவ்யபாரதி, 29; இவர், கடந்த 4 ஆண்டுகளான மனநலம் பாதித்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜப்பன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ