மேலும் செய்திகள்
மாநில போட்டிக்கு தகுதி மாணவர்களுக்கு பாராட்டு
01-Nov-2025
விக்கிரவாண்டி: அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்ட வருவாய் அளவிலான தடகள போட்டியில், அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், பங்கேற்று முதல் இரு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஏ.டி.எஸ்.பி., இளமுருகன், தலைமை ஆசிரியர் ரவிசங்கர் உதவி தலைமை ஆசிரியர் ராம்குமார் உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி, தஞ்சாவூரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க வழி அனுப்பி வைத்தனர்.
01-Nov-2025