உள்ளூர் செய்திகள்

குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் : மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்க உள்ளதாக, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் செப்., மாதத்திற்கான கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11:00 மணியளவில் நடக்கிறது. வரும் 2ம் தேதி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம்; 9ம் தேதி கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம்; 16ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகம்; 23ம் தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகம்; 25ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் கூட்டம் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி