உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்கில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ஆலங்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூட்டையுடன் பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் 300 பாக்கெட் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. குட்கா கடத்தி வந்த திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், 31; மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி