உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்

மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்

விழுப்புரம்: ஒரு வயது குழந்தையுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.விழுப்புரம் அடுத்த காகுப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 41; இவருக்கும், அவரது மனைவி சத்யா, 30; என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு, தனது மகள் ஜகதல பிரதாப தேவி, 1; என்பவருடன் சத்யா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை