உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செம்மண் குவாரி வழக்கில் ஜெயகுமார் மனு தள்ளுபடி

செம்மண் குவாரி வழக்கில் ஜெயகுமார் மனு தள்ளுபடி

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது.முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. உட்பட எட்டு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர்.அதையடுத்து, இவ்வழக்கில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்டம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, 'வழக்கிற்கு சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் கிரிமினல் வழக்கில் தலையிடக் கூடாது' என ஏற்கனவே பிறப்பித்துள்ள, சென்னை ஐகோர்ட்டின் முன் தீர்ப்பை மேற்கோள் காட்டி, ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்து, அடுத்த கட்ட விசாரணை, 29ம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை