பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
செஞ்சி: மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு ஆடி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.