உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வடதரம் கோவில் மகா கும்பாபிஷேகம்

வடதரம் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி : செஞ்சி அடுத்த திருவம்பட்டு மதுரா வடதரம் பிள்ளையார் கோவில், பெரியாண்டவர், பூவாடைக் காரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு பிள்ளை யார் கோவிலிலும், 9:15 மணிக்கு பெரியாண்டவருக்கும், 9:30 மணிக்கு பூவாடைக்காரியம்மன் கோவிலிலும், 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் முருகன் தலைமையில் கிராம மக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை