உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம்

முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம்

செஞ்சி : கிழவன்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. மேல்மலையனுார் அடுத்த கிழவன்பூண்டி கிராமத்தில் முனீஸ்வரன், அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த, ஆக., 4ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்த நிலையில், நிறைவு விழா நடந்தது. இதையொட்டி காலையில் ஊரணி பொங்கல், யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாரம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ