விழுப்புரம் அரசு இசை பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு இசை பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வரும் ஜூலை 4ம் தேதி துவங்குகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழக அரசின் கலைபண்பாட்டுத் துறையின் கீழ், 25 மையங்களில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பட உள்ளது. இதில், ஒரு மையமாக விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தெருக்கூத்து, பறையாட்டம், பம்பை, மல்லர் கம்பம், ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 17ஆகும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணமாக ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும்.வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி ஜூலை 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. ஓராண்டு முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சேர்க்கை பொறுப்பாளரை 9952798623 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.