பன்றி திருட்டு
விழுப்புரம், : விழுப்புரத்தில் பன்றிகளை திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அன்னதானபிரபு, 30; இவர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இவரின் பன்றிகள் இங்குள்ள அரசு கலை கல்லுாரி அருகே மேய்வது வழக்கம் .இந்நிலையில் அவரது 20 பன்றிகள் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில், வி.மருதுாரைச் சேர்ந்த சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர் சந்துரு (எ) கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.