உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடைகளில் கண்காணிப்பு கேமரா கண்டமங்கலத்தில் போலீசார் வலியுறுத்தல்

கடைகளில் கண்காணிப்பு கேமரா கண்டமங்கலத்தில் போலீசார் வலியுறுத்தல்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.கண்டமங்கலம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுப்பது குறித்து வணிகர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் நல்லுறவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமை தாங்கி, வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.சந்தேகப்படும் நபர்கள் தடைகளுக்கு வரும்போது உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை