உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை

காளான் பண்ணைக்கு தீ போலீஸ் விசாரணை

செஞ்சி:செஞ்சி அருகே காளான் பண்ணைக்கு தீ வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஹிமான் மகன் முன்வர் பாஷா 34; இவர் அதே பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக காளான் பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு 10:30 மணியளவில், காளான் பண்ணை திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது. இது குறித்து முன்வர் பாஷா, மர்ம நபர்கள் பண்ணைக்கு தீ வைத்ததாக அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி