உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

மயிலம் : மயிலம் கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த டி.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி வள்ளி, 38; நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, மயிலம் கோவிலில் நடந்த பங்குனி உத்தர விழாவில் சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது அவரது 4 கிராம் கொண்ட தாலிச் செயினை மர்ம நபர் அறுத்துச் சென்றுள்ளார்.வள்ளி அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ