அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு
விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று, நாளை சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு;அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.கல்லுாரியில் விண்ணப்பித்த அனைத்து பிரிவு மாணவ, மாணவியர்கள் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களோடுகலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு துறையிலும் நிரப்பப்படாத காலி இடங்களுக்கு மட்டுமே நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.