மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தார்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி ஊராட்சி காலனி பகுதியில் கூரை வீடு, பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டனர். அவர்களது வீட்டிற்கு தார்பாய், போர்வை, பிரட் ஆகியவற்றை ஊராட்சி தலைவர் வளர்மதி ராஜேந்திரன் தனது சொந்த நிதியில் வழங்கினார்.அரசு ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், சுபம் தங்கமாளிகை பிரேம், சுசில் உட்பட பலர் பங்கேற்றனர்.