உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

மின்சாரம் தாக்கி இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த இருவரது குடும்பத்திற்கு, அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டது. செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில், கடந்த மாதம் 19ம் தேதி கரும்பு வெட்டும் போது, முகையூர் அடுத்த கொங்கநல்லுார் ராமச்சந்திரன், 36; அவரது தம்பி சின்னராசு, 30; ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் இறந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் நிவாரணத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கிட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதேபோல், திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியைச் சேர்ந்த செந்தில் மகன் எத்திராஜ், 16; கடந்த 11ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பெண்ணையாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, அரசு நிவாரண தொகையை, பொன்முடி எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி