உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று காலை பஞ்சமாதேவி கிராமம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, பஞ்சமாதேவி சுடுகாடு அருகே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.உடன், லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், 30; மீது, வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை