உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

 தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி வரவேற்றார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி சிறப்புரையாற்றினார். மாநில தீர்மானக்குழு சிவா, மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம் ஒன்றிய சேர்மன்கள் சங்கீதஅரசி, கலைசெல்வி, வாசன், சச்சிதானந்தம், உஷா முரளி, ஓம்சக்திவேல், தனலட்சுமி உமேஸ்வரன். ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், ராஜ், ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன். ஒன்றிய தலைவர் முரளி, வழக்கறிஞர் சுரேஷ், நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் சுரேஷ்குமார், நகர பொருளாளர்கள் இளங்கோ, பாபுஜி பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், தொழில்நுட்ப அணி சாம்பசிவம், மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ