உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம், வேம்பியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, மாவட்ட சேர்மன் துவக்கி வைத்தார். வேம்பி சமுதாய கூடத்தில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ., சையது முகமது, ஆத்மா குழு தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு தென்பேர், டி.புதுப்பாளையம், எசாலம் கிராம மக்களிடம் மனுக்களை பெற்று முகாமினை துவக்கி வைத்து பேசினார். முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல்முருகன், தனி தாசில்தார் பாரதிதாசன்,வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் பாபு, சுந்தர்ராஜன்,வசந்தி ,கலைவாணி , வட்டார மருத்துவ அலுவலர் வினோத், ஒன்றிய கவுன்சிலர் சத்யா கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கில்பர்ட் ராஜ் , அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் சூர்யா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலம்பரசன், கனிமொழி சிலம்பரசன், சிவகாமி,தனலட்சுமி ரவி, விசாலாட்சி வேலு,இலக்கிய அணி கலைச் செல்வன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் .