மேலும் செய்திகள்
அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
16-Jan-2025
கோட்டக்குப்பம்: கடலில் குளித்தபோது மாயமான பெங்களூரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது.கர்நாடகா மாநிலம், பெங்களுரூ ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகன் ஹரிகிருஷ்ணன்,26; பெயிண்டரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன் நண்பர்கள் 4 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளித்தபோது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். கோட்டக்குப்பம் போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று மதியம், ஹரிகிருஷ்ணனின் உடல் கரை ஒதுங்கியது.
16-Jan-2025