உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி மோதி மாணவர் பலி

லாரி மோதி மாணவர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலியானார்.விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அன்பரசன், 17; இவர், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 25ம் தேதி, தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து, புதுச்சேரி நோக்கி சகாதேவன்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை இறந்தார்.இது குறித்து, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை