உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்

செஞ்சி : கல்லுாரிக்கு சென்ற தம்பியை காணவில்லை என அண்ணன் போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சி அடுத்த மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்துக்குமார் 20. இவர், செஞ்சியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை 12 மணியளவில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எனவே அவரது அண்ணன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை