மேலும் செய்திகள்
9 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது
28-Sep-2024
மயிலம்: மயிலத்தில் முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மயிலம், ஆரணியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 38; காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வுந்தது.நேற்று முன்தினம் மாலை மயிலம் - புதுச்சேரி சாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.அப்போது, ரஞ்சித்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தை வயிற்றில் குத்தினார். இதனைத் தடுக்க முயன்ற பட்டிக்கொட்டா தெருவைச் சேர்ந்த சுந்தர், 30; என்பவரின் கையில் வெட்டினார்.காயமடைந்த இருவரும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
28-Sep-2024