உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் கண்டெடுப்பு 

வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் கண்டெடுப்பு 

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் வீடூரில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னை விவேகானந்தா மிஷன் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெயப்பிரதா, கவுரவ விரிவுரையாளர் அரிஹரசுதன் ஆகியோர், வீடூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இது குறித்து, மாயகிருஷ்ணன் கூறுகையில், இந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பண்டைய காலத்தில் தெற்கு ஆசியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டவை. இவ்வெழுத்துக்கள் அசோக பிராமி, தென்பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளிலிருந்து வேறுபட்டதோடு, அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ் எழுத்துக்கள், குகை பிராமி படுக்கைகள், மட்கல ஓடுகள், நாணயங்கள், முத்திரை அச்சுகள், மோதிரங்கள், முதுமக்கள் தாழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஆதிச்சநல்லுார், முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம், கொடுமணல் மற்றும் தர்மநல்லுார் ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன. மேலும், புதுச்சேரி அரிக்கமேட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, விழுப்புரம் மாவட்டம் வீடூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு பானை ஓடுகளில், நோறாப மற்றும் பசீ ஆகிய தமிழிசொற்கள் (தமிழ் பிராமி) குறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பானை ஓட்டில், தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ஊர் வரலாற்று பாரம்பரியமிக்க ஊராகவும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
அக் 10, 2025 05:10

இந்த மாதிரியான எழுத்துகள் உருவாக்கி தமிழை வளர்த்த முத்துவேல் கருணாநிதிக்கு அரசு சார்பில் நடத்தப்படும், தொல் தமிழ் கலைஞர் என்று பட்டம் வழங்கப்பட வேண்டும்


naranam
அக் 09, 2025 14:14

இப்படி அர்த்தமில்லாத சொற்களைக் கண்டு பிடித்து என்ன பயன்? பண்டைய காலத் தமிழர்களின் சுய ஒழுக்கம் எப்படி இருந்தது? தற்போது நடப்பது போல குடித்து குடித்து சீரழிந்து தான் போனார்களா? போதைக்கு அடிமையாக இருந்தார்களா? கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவற்றில் ஊறித் திளைத்தார்களா? அல்லது சுய ஒழுக்கத்தோடு மானம் மரியாதையோடு ஒருவருக்கொருவர் சாதி பேதம் பாராமல் மதித்து வாழ்ந்தார்களா? இப்படி ஏதாவது பயனுள்ள விஷயங்களை வெளியிடுவதை விடுத்து அர்த்தமில்லாத அகழ்வாராய்ச்சியால் என்ன பயன்?


naranam
அக் 09, 2025 09:44

ஆஹா, அடுத்தது ஆரம்பித்துவிட்டது! சரி கிடைத்திருக்கிறது. அதனால் என்ன? இப்படி பெருமைபேசி என்ன பயன்? சமூகம் முன்னேறி விடுமா? ஐயோ போதும் போதும் என்று கதற வைக்கும் சாதிக் கொடுமைகள் ஒழிந்து விட்டனவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை