திண்டிவனம் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
திண்டிவனம்: உடல்நிலை சரியில்லாத சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.திண்டிவனம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜெயச்சந்திரன், 57; இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சென்னை, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று காலை 9.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.இவரது உடல் சொந்த ஊரான கொள்ளார் கிராமத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இறந்த ஜெயச்சந்தினுக்கு சாருலதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.