உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தல்

மதுபாட்டில் கடத்தல்

விழுப்புரம்: திண்டிவனத்தில் ஸ்கூட்டரில் மதுபாட்டில் கடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திண்டிவனத்தில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நகர பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் 11 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், கிடங்கல் பகுதியைச் சேர்ந்த தங்கம், 49; அசோக், 42; என தெரிந்தது. உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ