உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி: வெள்ள நிவாரணம் கேட்டு மேல் சேவூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செஞ்சி அடுத்த மேல் சேவூர் கிராம பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 9:00 மணிக்கு செஞ்சி - ரெட்டணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த செஞ்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியல் நடத்தியவர்களிடம் கலெக்டரிடம் பேசி நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 9:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ