உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம்: வளவனுார், அக்ரஹாரத்தில் உள்ள வேதவல்லி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பங்குனி மாத வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் வேதவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி