உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மனைவி, குழந்தை மாயம்: போலீசில் கணவர் புகார்

 மனைவி, குழந்தை மாயம்: போலீசில் கணவர் புகார்

விழுப்புரம்: காணை அருகே குழந்தையுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார். காணை அடுத்த வேடம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், 35; இவரது மனைவி அபிநயா, 30; இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 16ம் தேதி அபிநயா தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோபித்துக் கொண்டு தாய் வீடான ராமையன்பாளையம் கிராமத்திற்கு செல்வதாக குழந்தையுடன் சென்றவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. வீரன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை