உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ளத்தில் சிக்கி பெண் பலி

வெள்ளத்தில் சிக்கி பெண் பலி

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரைசேர்ந்தவர் முனியம்மாள், 68, இவர் விக்கிரவாண்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது சவுக்கை தோப்பில் தங்கி, அங்கேயே காவலாளியாக பணி புரிந்து வந்தார்.கடந்த 30 ம்தேதி நள்ளிரவில் வராகநதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் அடித்துசென்றுள்ளார். நேற்று ஓரளவு தண்ணீர் வடிந்த நிலையில் அவரது மகள் ஆனந்தி நிலத்திற்கு சாப்பாடு கொண்டு வந்த போது அவரை காணவில்லை. அவரது தேடிய போது மரங்களுக்கிடையே முனியம்மாளின் சடலம் சிக்கி இறந்து கிடந்தார் .விக்கிரவாண்டிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை