உள்ளூர் செய்திகள்

வேன் மோதி பெண் பலி

செஞ்சி : செஞ்சி அருகே சாலையோரம் நின்றிருந்த பெண் மீது வேன் மோதி இறந்தார். செஞ்சி அடுத்த கவரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி கல்பனா, 32; இவர் நேற்று மதியம் 2:15 மணியளவில் செஞ்சி - விழுப்புரம் மெயின் ரோட்டில் கவரை பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து மேல்மலையனுாருக்கு பக்தர்களை ஏற்றி வந்த மினி சரக்கு வேன் கல்பனா மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்தவர்கள் லேசான காயமடைந்தனர்.படுகாயம் அடைந்த கல்பனாவை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ