உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி

விழுப்புரம்: பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்சித்தாமூரை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் நவின்ராஜ், 28; இவர் நேற்று தனது பைக்கில், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்றார். அப்போது பின்னால் திருவண்ணாலை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென பைக், மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நவின்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். செஞ்சி போலீசார் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் திருவண்ணாமலை அருகே செம்மேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்,28; என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ