மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
10-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார்,: பூச்சி மருந்து குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிவர்மன் மகன் லோகேஸ்வரன், 24; ஏ.சி., மெக்கானிக். இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு 8:30 மணிக்கு திடீரென வலி அதிகமானது. இதனால் மனமுடைந்தவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை 8:00 மணிக்கு, உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
10-Jul-2025