உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.காந்தி நகர் நகராட்சி மினி பஸ் ஸ்டாண்ட் அருகில் நகர அதி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பஸ் ஸ்டாண்ட் முன்பு அண்ணாமலையை கண்டித்தும், கைது செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் செய்து அண்ணாமலை உருவப்படத்தை அவமதித்தனர். பாதுகாப்பிற்காக இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, சங்கரேஸ்வரி, எஸ்.ஐ., க்கள் முத்துராஜ், முத்துக் குமார் மற்றும் போலீசார் இருந்தனர். அவமரியாதை செய்ததை தடுக்காமல் நின்ற போலீசாரை டி.எஸ்.பி., காயத்ரி கடிந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை