| ADDED : ஜூன் 22, 2024 02:17 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து துன்புறுத்திய பிரகாஷ் 25, என்பவருக்கு 5 பிரிவுகளில் 51 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் அதனை ஏக காலத்தில் 20 ஆண்டுகள் அனுபவிக்க உத்தரவிட்டும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன் என்ற பிரகாஷ். இவர் 2020ல் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். 2021ல் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தினார், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தை வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கும் வந்து சிறுமியை மிரட்டியுள்ளார். ராஜபாளையம் மகளிர் போலீசார், பிரகாைஷ கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் 5 பிரிவுகளில் மொத்தம் 51 ஆண்டுகள் தண்டனை விதித்தும், அதனை ஏக காலத்தில் 20 ஆண்டுகள் அனுபவிக்க உத்தரவிட்டும், ரூ.34 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.