மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் இடையன்குளத்தில் இருந்து எம்.துரைச்சாமிபுரம் வழியாக கோப்பைநாயக்கன்பட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே இடையன்குளத்தில் இருந்து எம்.துரைச்சாமிபுரம் வழியாக கோப்பைநாயக்கன்பட்டி செல்லும் ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.ஆனால் தற்போது ரோடு முழுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.மாரனேரி விளாம்பட்டி, காக்கி வாடன்பட்டி பகுதி மக்கள் மல்லி, ஸ்ரீவில்லிபுத்துார் செல்வதற்கு கோப்பை நாயக்கன்பட்டி வழியாகத்தான் சென்று வருவர்.இந்நிலையில் ரோடு சேதத்தால் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர்.மேலும் இப்பகுதியில் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன.இங்கு வரும் வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே உடனடியாக சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago