மார்ச் 15-ல் மின் குறைதீர் முகாம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாக்களில் வசிக்கும் பொது மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, மார்ச் 15 காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து கேட்டறிய இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது, என்றார்.