| ADDED : ஜூலை 29, 2024 12:14 AM
விருதுநகர் : விருதுநகர் ஆர்.ஆர்., நகரில் தனியார் நிறுவன துணை மேலாளர் பாலமுருகன் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசம் தொழிலாளர் பார்சிங் 24,ஐ தனிப்படை போலீசார் கைது செய்தனர்.ஆர்.ஆர்., நகரில் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக இருப்பவர் பாலமுருகன் 41. இவர் பெற்றோரை பார்ப்பதற்காக திருநெல்வேலிக்கு சென்றார். இவர் வீட்டில் ஜூலை 13 இரவில் கதவு உடைத்து பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது.சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்ததில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து வந்து நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களை பிடிப்பதற்காக சிவகாசி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான தனிப்படையினர் ம.பி., சென்றனர்.எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா கூறியதாவது: இந்த கொள்ளை சம்பவத்தில் மத்திய பிரதேம் மாநிலம் தார் மாவட்டம் டான்டா அருகே பகோலியைச் சேர்ந்த பார்சிங் 24, கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் டான்டாவைச் சேர்ந்த சஞ்ஜெய் உள்பட மூவரை கைது செய்து நகைகளை மீட்க தனிப்படையினர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர், என்றார்.