மேலும் செய்திகள்
கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் திருட்டு
08-Aug-2024
சாத்துார் ; சாத்துார் வெங்கடாஜலபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி இவர் மனைவி சங்கரேஸ்வரி, 42. இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது . பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 கால் பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. டி.எஸ்.பி.சுரேஷ்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தார். சாத்துார் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.
08-Aug-2024