மேலும் செய்திகள்
அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
08-Mar-2025
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கள்ளக்காதல் தகராறில் பட்டாசு தொழிலாளி கருப்பசாமி 30, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.சிவகாசி சாத்துார் ரோடு சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி கருப்பசாமி. இவரது மனைவி கற்பகம் 22. கருப்பசாமி அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். கற்பகத்திற்கும் முருகன் காலனியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி மாரிமுத்துக்கும் 30, இரண்டு ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கருப்பசாமி, மாரிமுத்துவை சத்தம் போட்டு உள்ளார்.இந்நிலையில் கருப்பசாமி நேற்று மாலை 6:30 மணியளவில் சிவகாமிபுரம் காலனியில் நின்ற போது மாரிமுத்து, கணேசன் 40, குமார் 35, ஆகியோர் இரும்பு ராடு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். எஸ்.பி., கண்ணன் சம்பவயிடத்தை பார்வையிட்டார். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Mar-2025