உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சீருடை பணியாளர் தேர்வில் 1240 பேர் ஆப்சென்ட்

சீருடை பணியாளர் தேர்வில் 1240 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை போலீஸ் தேர்விற்கு மொத்தம் 9742 பேர் விண்ணப்பத் திருந்தனர். நேற்று நடந்த தேர்வில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 1250 பேர், காரியாபட்டி சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் 849 பேர், சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் 1750 பேர், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் 2646 பேர், திருத்தங்கல் கே.எம்.கே.ஏ., மெட்ரிகுலேசன் பள்ளியில் 2007 பேர் என மொத்தம் 8502 பேர் பங்கேற்றனர். இதில் 1240 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ