உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்கு டிச., 1 வரை தினமும் காலையில் மழையை பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இக்கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மழை காரணமாக மிகவும் குறைவான பக்தர்களே கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். இதனை தரிசனம் செய்தனர்.நாளை (நவ.30) கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக டிச.,1 வரை தினமும் காலையில் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !