மாணவர்களுக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒயிட் பீல்டு பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள், மங்காபுரம் விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றும், சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றும் சாதனை படைத்தனர். சாதனை மாணவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் தாளாளர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் சுமதி, முதல்வர் வனிதா, ஆசிரியர்கள் பாராட்டினர்.